ஐ.மு.கூட்டணி அரசின் பொருளாதார கொள்கையே எல்லா நெருக்கடிக்கும் காரணம்: அருண் ஜெட்லி குற்றச்சாட்டு
டெல்லி: ஐ.மு.கூட்டணி அரசின் பொருளாதார கொள்கையே எல்லா நெருக்கடிக்கு காரணம் என பா.ஜ.க மூத்த தலைவர் அருண் ஜெட்லி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
ஆட்சி நிர்வாகத்தில் உள்ள அரசியல் திறமை நம்பகத்தன்மை உள்ளதாக இருக்க வேண்டும் என்றும் ஆட்சி நிர்வாகத்தில் உள்ளோருக்கு கொள்கையின் தெளிவு அவசியம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 9%-ஆக உயர்த்த அரசிடம் உள்ள திட்டம் என்ன? என்றும் அருண் ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார். அரசின் தவறான நிர்வாகத்தால் பலதுறைகள் ஊழலில் சிக்கித் தவிப்பதாக ஜேட்லி புகார் தெரிவித்துள்ளார்.
ஐ.மு.கூட்டணி அரசின் பொருளாதார கொள்கையே நெருக்கடிக்கு காரணம் எனவும் சி.ஐ.ஐ கூட்டத்தில் அருண் ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனநாயகத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பிரதமருக்கே உள்ளது என்று டெல்லியில் இந்திய தொழிலக கூட்டமைப்பு மாநாட்டில் பா.ஜ.க மூத்த தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications