108 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கினார் ஜனாதிபதி: விருதை புறக்கணித்தார் ஜானகி!
டெல்லி: நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகளை இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழக்கினார். முன்பே கூறியதுபோல் விழாவைப் புறக்கணித்தார் பாடகி ஜானகி.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி வருகிறது. 2013-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.

4 பத்ம பூஷன் விருது:
அறிவியல் விஞ்ஞானிகள் பேராசிரியர் யஷ்பால் ரோத்தம், நரசிம்மா உள்பட 4 பேர் பத்ம பூஷன் விருதுக்கென தேர்வு செய்யப்பட்டார்கள்.

24 பத்மவிபூஷன் விருது:
தயாரிப்பாளர் டி.ராமநாயுடு, பாடகி எஸ்.ஜானகி, நடிகை சர்மிளா தாகூர், மறைந்த நடிகர் ராஜேஷ் கண்ணா, மறைந்த பாடகர் ஜஸ்பால்சிங் பட்டி, தமிழகத்தை சேர்ந்த ராமமூர்த்தி தியாகராஜன், கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் உள்பட 24 பேர் பத்மவிபூஷன் விருதுக்கும் அறிவிக்கப்பட்டனர்.

80 பத்மஸ்ரீ விருது:
தமிழகத்தைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி, லட்சமி நாராயணா சத்யராஜூ, எஸ்.கே.எம்.மலியானந்தன், தொழில் அதிபர் ராஜ்ஸ்ரீபதி, பேராசிரியர் டாக்டர் டி.வி.தேவராஜன் உள்ளிட்ட 80 பேருக்கு அவரவர் சார்ந்த துறைகளுக்கான பத்மஸ்ரீ விருதுக்கும் அறிவிக்கப்பட்டனர்.

விருது வழங்கும் விழா:
விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகைளில் இன்று நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். மறைந்த நடிகர் ராஜேஷ் கண்ணா, ஜஸ்பால்பட்டி சார்பில் அவரது குடும்பத்தி னர் விருதுகளை பெற்றுக் கொண்டனர். நடிகை ஸ்ரீதேவி, டிராவிட் உள்ளிட்டோர் நேரில் வந்து ஜனாதி பதியிடம் விருதை பெற்றுக் கொண்டனர்.

எம்.எஸ். ஜானகி புறக்கணித்தார்:
தனக்கு உரிய நேரத்தில் வழங்காமல் தாமதமாக பத்மவிபூஷன் விருது வழங்குவதால் அதை புறக் கணிப்பதாக ஜானகி ஏற்கனவேஅறிவித்து இருந்தார். அதன்படி இன்று அவர் விருது வழங்கும் விழாவை புறக்கணித்தார்.












Click it and Unblock the Notifications