போதைப் பொருள் விவகாரம்- விஜேந்தர்சிங் தலை தப்பியது!

Subscribe to Oneindia Tamil

Vijender Singh
டெல்லி: இந்திய குத்துச் சண்டை வீரர் விஜேந்தர்சிங்கிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகரில் கடந்த மார்ச் 3-ந் தேதி கனடாவைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பதைச் சேர்ந்த கலோன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விஜேந்தருக்கு பலமுறை ஹெராயின் சப்ளை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தான். ஆனால் விஜேந்தர்சிங் தம் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தார்.

இதனால் அவரிடம் ஊக்க மருந்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கும் விஜேந்தர்சிங் மறுத்தார். இது அவருக்கு நெருக்கடியைக் கொடுத்தது. இதனால் விஜேந்தர்சிங் பணிந்தார். அவரிடம் பரிசோதனை நடத்துவதற்காக சிறுநீர் மற்றும் ரத்த மாதிரியை தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழக அதிகாரிகள் ஏப்ரல் 3-ந்தேதி சேகரித்து சென்றனர்.

இந்நிலையில் விஜேந்தர் தடை செய்யப்பட்டுள்ள போதைப்பொருளை அண்மைக் காலங்களில் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+