ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கு: குற்றவாளி மிர்ஸா ஹிமாயத்துக்கு மரண தண்டனை

Subscribe to Oneindia Tamil

Mirza Himayat Inayat
புனே: புனே நகரில் ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளி மிர்ஸா ஹிமாயத் பெய்க்குக்கு மரண தண்டனை விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி நடந்த இந்த குண்டு வெடிப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த 5 பேர் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர். 64 பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த மிர்ஸா ஹிமாயத் பெய்க் (33) கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் புனே கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி என்.பி.தோடே தனது தீர்ப்பில், மிர்ஸா ஹிமாயத் பெய்க் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்று அறிவித்தார்.

முன்னதாக வழக்கு தொடர்பாக எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா என நீதிபதி கேட்டபோது, பதிலளித்த பெய்க், என்னை தவறுதலாக இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். உண்மைக் குற்றவாளி பிடிபடாததால் மும்பை பயங்கரவாத தடுப்பு போலீஸார் என்னை பலிகடாவாக்கிவிட்டனர். குண்டுவெடிப்பில் உயிரிழந்த 17 பேரைத் தொடர்ந்து, 18வது நபராக நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றார்.

தீர்ப்பு வாசிக்கப்பட்ட பின் பெயக் மயங்கி விழுந்தார். அவரின் மயக்கத்தைத் தெளிவித்து, தண்ணீர் கொடுத்து போலீஸார் சிறைக்கு அழைத்துச் சென்றனர். தீர்ப்பை வரவேற்று நீதிமன்றத்துக்கு வெளியே சில அமைப்பினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி டேவிட் ஹெட்லியும் இந்த குண்டுவெடிப்பில் தனக்கு தொடர்புள்ளதை சிகாகோ நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த அவர், ஜெர்மன் பேக்கரியில் தாக்குதல் நடத்துவது தொடர்பாக உளவு பார்த்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இப்போது அவர் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் யாசின் பட்கல், மோஷின் செளத்ரி, ரியாஸ் பட்கல், இக்பால் பட்கல், ஃபயாஸ் காஸ்கி ஆகியோருக்கும் தொடர்புள்ளது. அவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரே குற்றவாளியான மிர்ஸா ஹிமாயத் பெய்க்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருக்கும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, உள்நாட்டில் செயல்படும் இந்தியன் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மிர்ஸா ஹிமாயத் பெய்க்கின் உறவினர்கள், மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+