லோக்சபா தேர்தல்: 160 தொகுதிகளின் வெற்றியை தீர்மானிக்கும் ஃபேஸ்புக்
டெல்லி: வரும் லோக்சபா தேர்தல் வெற்றி தோல்வியை ஃபேஸ்புக் தான் தீர்மானிக்கப் போவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஃபேஸ்புக் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஃபேஸ்புக்கில் சொந்த விஷயங்கள் தவிர சினிமா, அரசியல் என்று பல்வேறு விஷயங்களும் அலசப்படுகிறது. இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தல் வெற்றி, தோல்வியை சமூக வலைத்தளங்கள் தீர்மானிக்கும் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஐ.ஆர்.ஐ.எஸ். நாலேட்ஜ் பவுன்டேஷன், இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை லோக்சபா தேர்தல் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது.

ஃபேஸ்புக்
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 160 தொகுதிகளின் வெற்றி தோல்வியை ஃபேஸ்புக் தீர்மானிக்கும் என்று ஆய்வு முடிவு கூறுகிறது.

மகாராஷ்டிரா, குஜராத் முடிவு ஃபேஸ்புக் கையில்
மகாராஷ்டிராவில் உள்ள 21 தொகுதிகள் மற்றும் குஜராத்தில் உள்ள 17 தொகுதிகளின் வெற்றியை ஃபேஸ்புக்கை பயன்படுத்துவோர் தான் தீர்மானிக்கவிருக்கின்றனர் என்கிறது ஆய்வு.

உ.பி., கர்நாடகா, டெல்லியும் ஃபேஸ்புக் தயவில்
உத்தர பிரதசேத்தில் 14 தொகுதிகள், கர்நாடகாவில் 12, மத்திய பிரதேசத்தில் 9, டெல்லியில் 5, ஹரியானா, பஞ்சாப், ராஜ்ஸதானில் தலா 5 தொகுதிகளின் முடிவுகள் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவோரின் தயவில் உள்ளது.

தமிழகத்தில் 12 தொகுதிகள்
தமிழகத்தில் 12 தொகுதிகளின் வெற்றி தோல்வியை ஃபேஸ்புக் தீர்மானிக்கவிருக்கிறது. கோவை, சேலம், நெல்லை, ஈரோடு, மதுரை, விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் ஆகியவை அந்த தொகுதிகள்.












Click it and Unblock the Notifications