திமுக முன்னாள் எம்பி செ குப்புசாமி மரணம்- கருணாநிதி இரங்கல்

ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக வாழ்க்கையைத் தொடங்கிய செ.குப்புசாமி, தி.மு.க.வின் தொ.மு.ச.வில் இணைந்து பணியாற்றினார்.
பின்னர், படிப்படியாக உயர்ந்து தொ.மு.ச.வின் பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், தொடர்ந்து 40 ஆண்டுகள் அப்பதவியை வகித்தார். தி.மு.க. சார்பில் வடசென்னை மக்களவைத் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வென்றார்.
இவர் மனைவி ஆண்டாள், மகள் செல்வி ஆகியோர் இறந்து விட்டனர். மற்றொரு மகள் மணி, மகன் ராஜா ஆகியோர் உள்ளனர். குப்புசாமியின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை மாலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குப்புசாமியின் மறைவையொட்டி 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. தி.மு.க.வின் நிகழ்ச்சிகள் 3 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் செ.குப்புசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications