சிவந்தி ஆதித்தன் உடலுக்கு கருணாநிதி- தலைவர்கள் நேரில் அஞ்சலி!

தினத்தந்தி அதிபரும் கல்வியாளருமான பா சிவந்தி ஆதித்தன் நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.
அவருக்கு முதல்வர் ஜெயலலிதா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருந்தார். இன்று பல்வேறு கட்சித் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திமுக தலைவர்
திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை போயஸ் கார்டன் சென்று சிவந்தி ஆதித்தன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சிவந்தி ஆதித்தன் மகன் பாலசுப்பிரமணிய ஆதித்தனிடம் துக்கம் விசாரித்தார். அவருடன் டிஆர் பாலு எம்பி, துரைமுருகன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
முன்னதாக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர்கள் பா வளர்மதி, ரமணா ஆகியோர் நேரில் சென்று சிவந்தி ஆதித்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், நக்கீரன் ஆசிரியர் கோபால், தினமலர் சார்பில் ஆதிமூலம் உள்ளிட்டோர் சிவந்தி ஆதித்தனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர் சரத்குமார், ராதிகா சரத்குமார், பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன், வணிகர் சங்கப் பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications