ஆபாச படம் பார்த்துவிட்டு, மது குடித்துவிட்டு 5 வயது சிறுமியை கற்பழித்த 2 பேர்!
டெல்லி: விலை மாதுவுக்கு கொடுக்க பணம் இல்லாததால் 5 வயது டெல்லி சிறுமி கடத்தி கற்பழிக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கிழக்கு டெல்லியில் 5 வயது சிறுமி கடத்தி கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சிறுமியை கடத்தி கற்பழித்த பீகாரைச் சேர்ந்த மனோஜ் குமார்(22) மற்றும் பிரதீப்(19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
விசாரணையில் மனோஜ் கூறுகையில், கடந்த 15ம் தேதி மாலை நானும், பிரதீப்பும் சேர்ந்து மது அருந்திவிட்டு, செல்போனில் ஆபாச படம் பார்த்தோம். அதன் பிறகு பிரதீப் உறவு வைக்க வேண்டும் என்று கூறினார். விலை மாதுவிடம் போகலாம் என்றால் அவ்வளவு பணமில்லை. அப்போது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பார்த்ததும் அவருக்கு சாக்லெட் கொடுத்து அறைக்கு கூட்டி வந்தோம். அறையில் வைத்து பிரதீப் தான் சிறுமியை கற்பழித்தார் என்றார்.
மனோஜின் பேச்சு சந்தேகப்படும்படி இருப்பதால் போலீசார் இந்த விவகாரத்தில் மூன்றாவது ஒரு நபர் இருக்கக்கூடுமோ என்று கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு டெல்லியில் இருந்து பீகாருக்கு ரயிலில் சென்றபோது எழுதப் படிக்கத் தெரியாத பிரதீப்புக்கு மனோஜ் பழக்கமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications