தமிழகத்துக்கு வினாடிக்கு 40 கன அடி சிறுவாணி அணை நீரை வழங்க கேரளா ஒப்புதல்
திருவனந்தபுரம்: சிறுவாணி அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் திறந்து விட கேரள அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கமும், கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப்பும் நேற்று திருவனந்தபுரத்தில் சந்தித்து பரம்பிகுளம்-ஆழியார் நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் பி.ஜே. ஜோசப் செய்தியாளர்களிடம் கூறியதாவது
பரம்பிகுளம்-ஆழியார் நதி நீர் ஒப்பந்தப்படி கேரளாவுக்கு உடனடியாக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வழங்க வேண்டும் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதன்படி, ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மணக்கடவு அணைக்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட தமிழகம் சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக சிறுவாணி அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட கேரளா ஒப்புக்கொண்டு உள்ளது. இதன் மூலம் பாலக்காடு மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும்.
சிறுவாணி அணையில் தற்போது நீர் மட்டம் குறைந்து உள்ளதால், தமிழகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 40 கன அடி தண்ணீரை, ராட்சத மோட்டார்களை பயன்படுத்தி பம்ப் செய்தால் மட்டுமே தமிழகம் அதனை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குமரிக்கு தண்ணீர் கிடைக்காது
ஆனால் வறட்சி காரணமாக வறண்டு கிடக்கும் நெய்யார் அணையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு, இப்போது தண்ணீர் வழங்க இயலாது என்று கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக்கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் செயற்பொறியாளர், பரம்பிகுளம்-ஆழியார் திட்ட தமிழ்நாடு தலைமை பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல் கேரள அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications