ராஜினாமா செஞ்சதால தப்பு செஞ்சேன்னு சொல்லக் கூடாது: அஸ்வனிகுமார் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

Ashwani Kumar
டெல்லி: தாம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாலேயே தவறு செய்திருப்பேன் என்று அர்த்தமில்லை என்று முன்னாள் சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார் தெரிவித்துள்ளார்.

நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாக அதை பார்வையிட்டு திருத்தம் செய்து பிரதமர் மன்மோகன்சிங்கைக் காப்பாற்றினார் சட்ட அமைச்சராக இருந்த அஸ்வனிகுமார் என்பது புகார். இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து நாடாளுமன்றத்தை முடக்கி வைத்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசையும் சிபிஐயும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. இதனால் அஸ்வனிகுமாருக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அஸ்வனிகுமார் நேற்று ராஜினாமா செய்தார். ஆனால் தமது ராஜினாமா பற்றி செய்தியாளர்களிடம் இன்று கருத்து தெரிவித்த அஸ்வனிகுமார், உச்சநீதிமன்றம் எனக்கு எதிராக விமர்சனம் எதையும் செய்யவில்லை. நான் ராஜினாமா செய்ததே சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்குத்தான்..என் மீது எந்த ஒரு விமர்சனமும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். கட்சியின் விசுவாசமிக்க வீரனாக இருக்க விரும்புகிறேன் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+