கங்கிராட்ஸ்!... தேர்வு முடிவு தெரியாமல் தவித்த தூத்துக்குடி மாணவன் பாஸ்- 1072 மார்க் எடுத்தார்!!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: பிளஸ்டூ தேர்வு முடிவு தெரியாமல், எடுத்த மதிப்பெண் தெரியாமல் தவித்து வந்த தூத்துக்குடி மாணவன் பாஸ் ஆனதோடு மட்டுமல்லாமல் 1072 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். இதனால் அந்த மாணவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார்.

தூத்துக்குடி டூவிபுரம் 10வது தெருவை சேர்ந்தவர் கோமதி. இவரது மகன் காளீஸ்வரன். தூத்துக்குடியிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்டூ படித்து பொதுத்தேர்வு எழுதிய இவருக்கு ரிசல்ட் வரவில்லை. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தில் கேட்டபோது எந்தவித பதிலும் முறையாக கிடைக்கவில்லை.

தேர்வுகளை சரியான முறையில், முறையாக எழுதியபோதும் தனக்கு ரிசல்ட் வராத காரனத்தினால் மிகுந்த மனவருத்தம் அடைந்துள்ளேன். எனவே எனது எண்ணுக்கு உடனடியாக ரிசல்ட் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவர் காளீஸ்வரன் கலெக்டர் ஆஷிஷ்குமாரிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.

மேலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமும் மனு கொடுத்தார். இதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து நேற்றுஇரவு காளீஸ்வரனின் தேர்வு முடிவை கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி அந்த மாணவன் மொத்தம் 1072 மதிப்பெண்கள் பெற்று தேறியுள்ளார். தமிழில் 183, ஆங்கிலத்தில் 165, இயற்பியலில் 172, வேதியியலில் 165, கம்ப்யூட்டர் அறிவியலில் 198, கணிதத்தில்189 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இரவோடு இரவாக இந்தத் தகவல் சம்பந்தப்பட்ட மாணவனுக்கும், அவரது பள்ளிக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதனால் அந்த மாணவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+