Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணத்திற்கு முன் உல்லாசம்: நிச்சயம் செய்த பெண்ணை டீலில் விட்ட வாலிபர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணம் நிச்சயம் செய்த பெண்ணுடன் ஜாலியாக ஊர்சுற்றி உல்லாசம் அனுபவித்துவிட்டு பின்னர் திருமணத்திற்கு மறுத்த வாலிபர் இப்போது கைது செய்யப்பட்டு சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 23) தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், பழைய தாம்பரத்தை சேர்ந்த நிர்மல் (26) என்பவருக்கும் திருமணம் செய்ய கடந்த டிசம்பர் மாதம் நிச்சயம் செய்யப்பட்டது. எம்.பி.ஏ பட்டதாரியான நிர்மல், தாம்பரத்தில் பிரிண்டிங் பிரஸ் மற்றும் திருமண அழைப்பிதழ் விற்பனை செய்யும் கடைகளை நிர்வகித்து வருகிறார்.

நிச்சயதார்த்தம் முடிந்தபின்னர், நிர்மலும் மல்லிகாவும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்தனர். அப்போது அவர்கள் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மல்லிகாவை ஒருதலைபட்சமாக காதலித்த இளைஞர் ஒருவர் தவறான தகவல்களை நிர்மலின் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

இதனால் நிர்மலுக்கும், மல்லிகாகவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து தவறான தகவலை அளித்த மாணவரை அழைத்து வந்து உண்மையை கூற சொன்னார்கள். அவரும் உண்மையை கூறி மன்னிப்பு கேட்டார். இதன் பின்னர் இரு தரப்பு உறவினர்களும் கலந்து ஆலோசித்து, வரும் ஜூன் மாதம் திருமணத்தை நடத்த செய்ய முடிவு செய்தனர். ஆனாலும் நிர்மல் மட்டும் திருமணத்திற்கு சம்மதிக்கவே இல்லை. இதற்கு நிர்மலின் தாயாரும், உறவினர்களும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மல்லிகா உடனடியாக தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நிர்மலை கைது செய்தனர். தலைமறைவான அவரது தாயார் சசிகலாவை தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+