மீ்ண்டும் ஸ்ரீரங்கம் செல்கிறார் ஜெ... 3ம் தேதி அரசு விழா

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா, நாளை மறுதினம் (3ம் தேதி), ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் அரசுவிழாவில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில், காகித அட்டை தயாரிப்பு ஆலை, 120 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஆகியவை, கடந்த, 24ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

அதில் முதல்வர் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், காகித அட்டை தயாரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், விழா ஒத்தி வைக்கப்பட்டது.

இவ்விழா 3ம் தேதி, மாலை, 5:30 மணிக்கு, ஸ்ரீரங்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். இதற்கான அழைப்பிதழில், புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் துவக்க விழா என அச்சிடப்பட்டுள்ளது.

சமீபத்தில்தான் ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதர் கோவிலில் வழிபட்டார் ஜெயலலிதா என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+