அடப்பாவிகளா... கணவருடன் பைக்கில் சென்ற பெண் பஸ்சில் ஏறி தப்பினார்
திருவண்ணாமலை: விருப்மில்லாமல் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது திடீரென அதிலிருந்து நைசாக இறங்கி சாலையில் போய்க் கொண்டிருந்த வேலூர் பஸ்சில் ஏறி தப்பினார். பைக்கில் உட்கார்ந்திருந்த மனைவி பஸ்சில் பயணித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் கணவர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பொன்னுசாமி தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் அண்ணாமலை.டெய்லராக இருக்கிறார். இவருக்கும் 22 வயதான மீனா என்பவருக்கும் திருமணம் நடத்தினர் இரு குடும்பத்தார். மீனாவுக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை போலும்.
இந்த நிலையில் கடந்த 27ம் தேதி தனது பெரியம்மா மகள் வீட்டுக்கு விருந்துக்காக மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கிளம்பினார் அண்ணாமலை. போளூர் டைவர்சன் சாலையில் போய்க் கொண்டிருந்தபோது வாகன நெரிசலில் சிக்கியதால் மோட்டார்சைக்கிளை மெதுவாக ஓட்டினார் அண்ணாமலை.
அப்போது திடீரென மோட்டார் சைக்கிளிலிருந்து நைசாக இறங்கிய மீனா, சாலையில் போய்க் கொண்டிருந்த வேலூர் பேருந்தை நிறுத்தி ஏறி விட்டார். இதை அறியவில்லை அண்ணாமலை. ஆனால் அந்தப் பேருந்து தன்னைக் கடந்தபோது பஸ்சில், மீனா உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அதிர்ந்தார். பிறகுதான் தெரிந்தது, பைக்கிலிருந்து மீனா இறங்கி தப்பிய விவரம்.
இதுகுறித்து போலீஸில் அவர் புகார் கொடுத்தார். மீனா, 20 பவுன் நகை மற்றும் ரூ. 5000 பணத்துடன் போய் விட்டதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications