பீகாரில் வரதட்சணையாக எருமைமாடு கொடுக்காததால் மனைவி, மகனை எரித்துக் கொன்ற நபர் கைது

Subscribe to Oneindia Tamil

அரா: பீகாரில் வரதட்சணையாக எருமைமாடு கொடுக்கப்படாததால் ஒருவர் தனது மனை மற்றும் 14 மாத ஆண் குழந்தையை எரித்துக் கொலை செய்துள்ளார்.

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் நஷ்ரத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உபேந்திரா மஹதோ. அவரது மனைவி ரினா தேவி(25). அவர்களுக்கு 14 மாத ஆண் குழந்தை ஒன்று இருந்தது. மஹதோவுக்கும், ரினாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அன்றில் இருந்தே வரதட்சணையாக தனக்கு எருமைமாடு கொடுக்கப்படாததால் மஹதோ தனது மனைவியை கொடுமைபடுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது மனைவி மற்றும் மகன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். அவர்கள் இருவரும் உடல் கருகி உயிர் இழந்தனர். இதையடுத்து ரினாவின் குடும்பத்தார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் மஹதோவை கைது செய்தனர். மேலும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்த 3 பேர் தலைமறைவாகிவிட்டனர்.

அவர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். ஒரு எருமைமாட்டுக்காக மனைவி, மகனை ஒருவர் எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+