பாலியல் தொழிலாளியின் பிள்ளைகளிடம் ’அப்பா யார்’ என கேட்க மகாராஷ்டிரா அரசு தடை!
நாக்பூர்: பாலியல் தொழில் புரியும் பெண்களின் குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கும்போது, கண்டிப்பாக அப்பா பெயர் கேட்கக்கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மஹாராஷ்ட்ரா அரசு.
பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் போது தாய், தந்தை பெயரைக் குறிப்பிடுவது அவசியம் என்ற நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் பிள்ளைகள் மற்றும் திருநங்கைகளால் தத்தெடுத்து வளர்க்கப் படும் வளர்ப்பு பிள்ளைகளின் பாடு கேள்விக்குறியாகி விடுகிறது.
இதன் காரணமாக அவர்கள் தங்கள் பிள்ளைகளை கல்வி பயில அனுப்ப தயங்கி வந்தனர். இவர்களின் துயரினை களையும் வகையில், கல்வி நிறுவனங்களுக்கு மராட்டிய அரசு கடந்த வாரம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில், ' பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிலையங்களில் விபசார பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டவர்கள் கல்வி அறிவு பெறுவதற்காக தங்களது குழந்தைகளை சேர்க்கும்போது தந்தையின் பெயர் மற்றும் வசிப்பிட சான்றிதழ் உள்ளிட்டவற்றை கேட்கக்கூடாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'கல்வி அறிவு பெரும் சட்டத்தின்' கீழ் கட்டாயம் தனியார் கல்வி நிறுவனங்கள் விபசார பெண்கள் மற்றும் திருநங்கைகளின் குழந்தைகளுக்கு தங்கள் பள்ளி, கல்லூரிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு கட்டாயம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசின் இந்த உத்தரவால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ள பாலியல் தொழில் புரியும் பெண்கள் மற்றும் திருநங்கைகள், அரசுக்கு தங்களது நன்ரியினை தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications