For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்ததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி நச்சு வாயுக்கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மார்ச் 29-ஆம் தேதி ஆலையை மூட உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஆலை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க இடைக்கால அனுமதி வழங்கி தேசிய பசுமைத் தீர்ப்பாயம், உத்தரவிட்டிருந்தது. மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
TN govt has moved to SC against the re opening of Sterlite.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X