டெல்லி: நரேந்திர மோடி பாஜகவின் எந்தப் பதவிக்கு வந்தால் எனக்கென்ன கவலை. அதுகுறித்து நான் அக்கறை காட்டவில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நரேந்திர மோடி குறித்தோ அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஐக்கிய ஜனதாதளம் வருவது குறித்தோ நான் கவலைப்படவில்லை.
மோடிக்குப் பதவி என்பது பாஜகவின் உட்கட்சி விவகாரம். அதுகுறித்து நான் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. காங்கிரஸ் கட்சி என்ன செய்கிறது, எப்படி செயல்படுகிறது, அதை மேம்படுத்த என்ன செய்யலாம் என்பது மட்டுமே எனது கவலையாகும்.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே நிறைய வேலைகள் உள்ளன. அதையெல்லாம் நான் கவனித்தாக வேண்டும். எனவே அதுகுறித்து மட்டுமே நான் கவலைப்பட்டாக வேண்டும் என்றார் ராகுல் காந்தி.
In his first comments on developments in BJP, Rahul Gandhi today said he was not concerned about the elevation of Narendra Modi nor was he going to invite its ally JD(U) to UPA fold. "It (elevation of Modi) is their (BJP's) internal matter. It is really not my concern. My concern is how the Congress party is doing and how we are doing in different states. What are the different types of action we are taking to benefit the people," he told reporters.