நெய்வேலி: என்.எல்.சியின் 5% பங்குகளை விற்க அனுமதி அளித்தது மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
என்.எல்.சி பங்குகளை மத்திய அரசு விற்க முடிவு செய்ததை முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, வைகோ உள்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.
பொருளாதார விவகாரத்துக்கான அமைச்சரவை குழு கூடி இந்த முடிவை இன்று அறிவித்துள்ளது.
என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் ரூ.500 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications