ரூபாய் மதிப்பு சரிவு.. மீண்டும் லிட்டருக்கு ரூ3-5 வரை உயருகிறது பெட்ரோல்?

Subscribe to Oneindia Tamil

Petrol Price
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் சரிவை சந்தித்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரக் கூடிய நிலை உருவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றன. தொடரும் ரூபாய் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வால் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இருக்கின்றன.

தற்போது பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் அனுமதி கேட்டுள்ளன. அதுபோல டீசல் விலையை லிட்டருக்கு 50 பைசா உயர்த்துவதற்கு பதில் மேலும் அதிகமாக உயர்த்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் சமையல் கியாஸ் விலையும் கணிசமான அளவுக்கு உயரக்கூடும்.

அனேகமாக வரும் ஜூலை 1-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி விலை உயர்த்தப்பட்டால் பயணிகள், சரக்கு போக்குவரத்து கட்டணமும் மீண்டும் உயரலாம். காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்க்ள விலை உயரும் அபாயம் உள்ளது.

சிலிண்டர் விலையும் உயருகிறது:

இதனிடையே சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் உயர்த்த வேண்டும் என மத்திய அரசை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சரவையும் இதற்கான அனுமதியை எந்த நேரத்திலும் வழங்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் உயர்த்தும் புதிய விலை கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளிக்க உள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டால் 2016, 2017 ஆம் ஆண்டிற்குள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.250 வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+