கேதர்நாத்தில் பிணங்களை எரிக்க ஹெலிகாப்டரில் வந்த விறகு கட்டுகள்
ருத்ரபிரயாக்: உத்தரகண்ட் மாநிலம் கேதர்நாத்தில் குவிந்துள்ள பிணங்களை எரிக்க காய்ந்த விறகு இல்லாமல் கௌசாரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விறகுகள் கொண்டு வரப்பட்டன.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கன மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோவில் நகரமான கேதர்நாத்தில் வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் பலியாகினர். கேதர்நாத்தில் குவிந்துள்ள பிணங்களை ஒரே இடத்தில் வைத்து எரிக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் உடல்களை எரிக்க அங்கு காய்ந்த விறகுகளே இல்லை. இதனால் சமோலி மாவட்டம் கௌசாரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விறகுகள் கொண்டு வரப்பட்டன.

விறகுகள்
கௌசாரில் லாரியில் இருந்து விறகுகளை விமானப்படை ஹெலிகாப்டருக்கு ஏற்றும் காட்சி.

பறந்து சென்ற விறகுகள்
காய்ந்த விறகுகள் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் கேதர்நாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கேதர்நாத்
கேதர்நாத்தில் ஹெலிகாப்டரில் இருந்து போடப்படும் விறகு கட்டுகள்.












Click it and Unblock the Notifications