சன் டிவி செய்தியாளர் அவிநாசிலிங்கம் காலமானார்

சன் செய்திகளுக்காக கோவையில் இருந்து அவினாசி லிங்கம் என்ற வார்த்தைகள் கேட்டிராதவர்கள் இருந்திருக்க முடியாது. கடந்த 21 ஆண்டுகளாக ஊடகத்துறையில் முழு நேர செய்தியாளராகப் பணியாற்றி வந்த அவினாசி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் புதன்கிழமை மாலை சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
39 வயதான அவிநாசிலிங்கம், கடந்த ஒர் ஆண்டுகாலமாக கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் செய்திப்பணியில் இருந்து விலகவில்லை. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாகவே உடல்நிலை மோசமடைந்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் புதன்கிழமை மாலை மரணமடைந்தார். கோவைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு நேற்று பிற்பகல் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
அவிநாசிலிங்கத்தின் மனைவி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications