நீடிக்கும் என்எல்சி ஸ்டிரைக்: நீரில் மூழ்கும் நிலக்கரி சுரங்கங்கள்… மின் உற்பத்தி பாதிப்பு
நெய்வேலி: என்எல்சி தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால், நிலக்கரிச் சுரங்கங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தியும் அடியோடு முடங்கியுள்ளது.
என்.எல்.சியின் 5 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை எதிர்த்து, 30000 தொழிலாளர்கள் கடந்த 3ஆம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டம் ஐந்தாவது நாளாக நீடிப்பதால் அங்கு மின் உற்பத்தி படிப்படியாக குறைந்து வருகிறது.

நீரில் மூழ்கும் அபாயம்
சுரங்கத்தின் நீர்க்கட்டுப்பாடு பிரிவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்களும் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் நிலக்கரிச் சுரங்கங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் துணை மேலாளர் ஆர். பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நிலக்கரி தட்டுப்பாடு
வேலை நிறுத்தம் காரணமாக மின் உற்பத்தியில் 500 மெகாவாட் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பாதாள அறைகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பழுப்பு நிலக்கரி இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே மின்சார உற்பத்தி செய்யப் போதுமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மின் உற்பத்தி பாதிப்பு
பழுப்பு நிலக்கரி தீர்ந்துவிட்டால் மின்சார உற்பத்தி படிப்படியாக குறைந்து பூஜ்ய அளவை எட்டிவிடும் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஒரு அனல்மின் உலை நிறுத்தப்பட்டால், அதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வாரங்கள் பிடிக்கும் எனவே அனல் மின் உலைகள், மின் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தாமல் இருப்பதற்காக பழுப்பு நிலக்கரி எரிபொருளுக்குப் பதிலாக பர்ன்ஸ் ஆயிலை பயன்படுத்த நெய்வேலி நிலக்கரி நிறுவன நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications