ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான புகார்: ஆகஸ்ட் 1ம் தேதி விசாரணை!

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஏர்செல்,மேக்சிஸ் வழக்கு விசாரணையின் போது சிபிஐ தரப்பில், தயாநிதி மாறன் உள்ளிட்டோரிடம் விசாரணை முடிவடைந்துவிட்டது என்று கூறப்பட்டது.
அப்போது ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, 2005-ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தின் 74% பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது. பின்னர் அதே நிறுவனமே இதர பங்குகளையும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கியது. இது இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை வாங்க வகை செய்யும் சட்டவிதிகளுக்கு முரணானது. முறைகேடாது. இதை அனுமதித்தது நிதி அமைச்சர் ப.சிதம்பரம்தான் என்று புகார் தெரிவித்திருந்தேன். அதுபற்றிய விசாரணை என்னாயிற்று என்றும் கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரத்தில் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் மீதான வழக்கு விசாரணை தொடர்பாக ஆகஸ்ட் 1-ந் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் சிபிஐ தரப்பு என்ன சொல்கிறது என்று பார்த்துவிட்டு அன்று விசாரணையை நடத்தலாம் என்று கூறினர்.
இதே ஏர்செல்- மேக்சிஸ் விவகாரத்தில் முன்பு ப.சிதம்பரம் மீது புகார் கூறப்பட்ட போது பார்லிமென்ட்டில் பேசிய சிதம்பரம், நெஞ்சில் குத்துங்க.. நேர்மையை சந்தேகிக்காதீர்கள் என்று உருக்கமாக பேசியிருந்தார். அப்போது எந்த ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்திலும் எனக்கோ என் குடும்பத்தினருக்கோ எந்த ஒரு பங்கும் இல்லை என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications