மறியல் செய்த இளவரசன் பெற்றோர் கைது- வீட்டில் கொண்டு போய்விடப்பட்டனர்!
தர்மபுரி: 144 தடை உத்தரவை மீறி தர்மபுரி அரசு மருத்துவமனைக்குள் செல்ல முயன்ற இளவரசனின் பெற்றோர் உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்து வலுக்கட்டாயமாக வீட்டில் கொண்டு போய்விட்டனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி போராட்டம் நடத்த முடியாத வகையில் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் மரணமடைந்த இளவரசனின் உடல் தர்மபுரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயர் நீதிமன்றம் உத்தரவுபடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள இளவரசன் உடலை சென்னையில் இருந்து சென்ற டாக்டர்கள் குழு இன்று காலை ஆய்வு பணியை மேற்கொண்டது.

இந்த ஆய்வு பணியின்போது இளவரசனின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனையில் இருந்தனர். பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே சென்ற பெற்றோர், உறவினர்கள் மீண்டும் திரும்பினர்.
அப்போது, அவர்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். 144 தடை உத்தரவு இருப்பதால் கும்பலாக கூடவோ, இருக்கவோ கூடாது என்று காவல்துறையினர் கூறினார்.
ஆனால், காவல்துறையினரின் தடையை மீறி இளவரசனின் தந்தை இளங்கோ, தாயார் கிருஷ்ணவேணி, உறவினர் என 30 பேர் மருத்துவமனைக்குள் செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்தனர். இதையடுத்து, காவல்துறையினரின் கெடுபிடியை கண்டித்து அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அனைவரையும் போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினர். இளவரசனின் பெற்றோரை அவர்கள் வீட்டில் கொண்டு போய்விட்ட போலீசார் அவர்கள் வெளியே வந்து மீண்டும் போராடத வகையில் பாதுகாப்பும் போட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications