5வது முறையாக ‘குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமாக’ ஏர் ஏசியா தேர்வு!

குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் நிறுவனங்களில் சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்து வருகிறது ஸ்கைராட்ஸ். கடந்த 4 ஆண்டுகளாக ஏர் ஏசியா தேர்வு செய்யப்பட்டு வந்தது. நடப்பாண்டிலும் 5வது முறையாக ஏர் ஏசியாவே தொடங்கப்பட்டுள்ளது.
ஏர் ஏசியா தொடர்ந்து 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டதைத் கொண்டாடும் வகையில்' 'ஹை பைவ்' திட்டத்தை அறிவித்துள்ளது. சிறப்பு சலுகை கட்டணத்தில் 20 லட்சம் இருக்கைகளை வழங்குவதுதான் இதன் நோக்கம்.
இத்திட்டத்தின் மூலம் ஏர் ஏசியாவின் வழித்தட வலையமைப்பில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் கோலாலம்பூரில் இருந்து ரூ522 தொடக்க கட்டணத்தில் இருந்து 20 லட்சம் இருக்கைகளுக்கான முன்பதிவுகளை மேற்கொள்ளும் ஆபர் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்த பயணிகள் 2014 பிப்ரவரி 10-ந்தேதியிலிருந்து ஆகஸ்டு 5-ந்தேதி வரை ஏர் ஏஷியா விமானங்களில் பயணிக்கலாம்.
கொல்கத்தா, சென்னையிலிருந்து பாங்காக் வரையிலான ஒரு வழி பயணத்திற்கு ரூ.3,300 (வரிகள் உட்பட) என்ற மிகக் குறைந்த தொடக்க கட்டணத்தில் இந்த ஆபர் தொடங்குகிறது. பெங்களூர், சென்னை, கொச்சி, கொல்கத்தா மற்றும் திருச்சியிலிருந்து கோலாலம்பூருக்கு அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வழி பயணக்கட்டணம் ரூ.4,000 என்ற தொடக்க கட்டணத்தில் தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications