எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க புதிய சமூக வலைதளம்..உருவாக்குகிறது காங்கிரஸ்!

லோக்சபா தேர்தலை ஒட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் ஊடகங்களில் எப்படி பேச வேண்டும்? எப்படியெல்லாம் பேசக் கூடாது என்பது பற்றிய 2 நாள் மாநாடு நேற்றும் இன்றும் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் 200 காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், சசி தரூர், மணீஷ் திவாரி ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் திறந்து வைக்கப்படும் புதிய சமூக வலைதளமானது காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
நாட்டின் மிக முக்கிய பிரச்சனைகளில் நாடு முழுவதும் காங்கிரசார் ஒரே கருத்தை தெரிவிக்க இந்த கிட்கி பயன்படுத்தப்படும். இதை மேலும் வலுப்படுத்த மொபைல் போனில் பயன்படுத்தப்படும் முறைகளையும் உபயோகிக்கவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கிட்கி மூலம் ஒரு காங்கிரஸ் பேச்சாளர், தொலைக்காட்சி ஊடகங்களில் பேசும் போது எதை பேச வேண்டும்; எதை பேசக் கூடாது என்ற டிப்ஸ்களையும் கொடுக்கும்.
என்னவெல்லாம் செய்துதான் பார்க்கிறார்கள்!












Click it and Unblock the Notifications