சம்பா சாகுபடிக்காக ஆகஸ்ட் 12ல் மேட்டூர் அணை திறப்பு: ஜெ. உத்தரவு

ஆண்டு தோறும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இதன்படி கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி அணை திறக்கப்பட வேண்டும். மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
கடந்த ஒருமாத காலமாக கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அங்கு அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
தற்போது அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் உள்ளதால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக அணையை திறக்க வலியுறுத்தினர்.
காவிரி டெல்டா மாவட்டங்கள்
இதனையடுத்து மேட்டூர் அணையை ஆகஸ்ட் 12ம் தேதி திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம் கரூர், திருச்சி மாவட்ட பாசன பகுதிகளில் 2.40லட்சம் ஏக்கர் விவசாய நிலமும், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் 6.95 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும், கடலூர் மாவட்டத்தில் 57ஆயிரத்து 500 ஏக்கர் நிலமும், கல்லணை பாசன பகுதிகளில் 2.22 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும், பெண்ணாறு பாசன பகுதிகளில் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடையும்.
ஆடிப்பெருக்கு விழா
தற்போது குடிநீர் தேவைக்காகவும், மின்சார உற்பத்திக்காகவும் 3000 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆடிப்பெருக்கு அன்று தண்ணீரின் தேவை அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக 3 ஆயிரம் கன. அடி தண்ணீரை இன்று முதல் ஆகஸ்ட்2-ம் தேதி வரை திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications