கணவரை சேர்த்து வைக்க கோரி போராடிய பெண் மீது திருட்டு வழக்கு
நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள விஜயநாராயணத்தில் கணவரை சேர்ந்து வைக்க கோரி கணவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருந்து வந்த பெண் மீது போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாங்குநேரி அருகேயுள்ள விஜயநாராயணம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகணேஷ். பெங்களுரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பாளையங்கோட்டையை சேர்ந்த சாந்தி என்பவருககும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
ஆனால் ஓரே மாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். குழந்தைகள் இல்லை. இந்நிலையில் பாளையில் தந்தையுடன் இருந்த சாந்தி தனது கணவருடன் சேர்ந்து வாழ கடந்த மே மாதம் முத்துகணேஷ் வீட்டுக்கு வந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முத்துகணேஷ் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறி வேறு ஊருக்கு சென்று விட்டார்.
ஆனால் சாந்தி விடாப்பிடியாக கணவருடன் சேர்ந்து வாழ கணவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் முத்துகணேசின் குடும்பத்தினர் ஊருக்கு திரும்பினர். ஆனால் வீட்டில் இருந்த பொருட்களையும், வீடு கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களையும் சாந்தியும், அவரது தநதையும் திருடி விட்டதாக முத்துகணேஷ் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து விஜயநாராயணம் போலீசார் சாந்தி மீதும், அவரது தந்தை முத்தையா, அவரது மகன், மகள், மனைவி மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications