கணவரை சேர்த்து வைக்க கோரி போராடிய பெண் மீது திருட்டு வழக்கு
நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள விஜயநாராயணத்தில் கணவரை சேர்ந்து வைக்க கோரி கணவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருந்து வந்த பெண் மீது போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாங்குநேரி அருகேயுள்ள விஜயநாராயணம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகணேஷ். பெங்களுரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பாளையங்கோட்டையை சேர்ந்த சாந்தி என்பவருககும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
ஆனால் ஓரே மாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். குழந்தைகள் இல்லை. இந்நிலையில் பாளையில் தந்தையுடன் இருந்த சாந்தி தனது கணவருடன் சேர்ந்து வாழ கடந்த மே மாதம் முத்துகணேஷ் வீட்டுக்கு வந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முத்துகணேஷ் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறி வேறு ஊருக்கு சென்று விட்டார்.
ஆனால் சாந்தி விடாப்பிடியாக கணவருடன் சேர்ந்து வாழ கணவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் முத்துகணேசின் குடும்பத்தினர் ஊருக்கு திரும்பினர். ஆனால் வீட்டில் இருந்த பொருட்களையும், வீடு கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களையும் சாந்தியும், அவரது தநதையும் திருடி விட்டதாக முத்துகணேஷ் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து விஜயநாராயணம் போலீசார் சாந்தி மீதும், அவரது தந்தை முத்தையா, அவரது மகன், மகள், மனைவி மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications