50 பாக். ராணுவத்தினரை கொல்ல வேண்டும்: ராம்தேவ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் 5 ராணுவ வீரர்களைக் சுட்டுக் கொலை செய்ததற்கு பழியாக 50 பாகிஸ்தான் ராணுவத்தினரை கொல்ல வேண்டும் என்று யோகா குரு ராம்தேவ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராம்தேவ், கண்ணுக்குக் கண்..பல்லுக்குப் பல் என்ற வகையில் மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும். நமது ராணுவத்தின் 5 வீரர்களை பாகிஸ்தான் சுட்டுக் கொலை செய்துள்ளது. நாம் 50 பாகிஸ்தான் ராணுவத்தினரை சுட்டுக் கொல்ல வேண்டும்.
இப்போது அறிக்கை விட்டுக் கொண்டிருக்கக் கூடிய நேரமில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. தற்போதைய மத்திய அரசு முடங்கிப் போன அரசாக இருக்கிறது. தவறான அறிக்கைகளை வெளியிட்டு நாட்டின் பாதுகாப்பை இக்கட்டில் கொண்டு போய்விட்டிருக்கிறது. தற்போதைய அரசால் நாட்டின் கவுரவத்தைக் காப்பாற்ற முடியாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications