என் ஏழு கேள்விகளுக்கு என்ன பதில்?
1) உணவு பாதுகாப்பு சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் அரிசி 1 லட்சம் டன் அளவுக்கு குறைக்கப்பட்டுவிடும் என்பது தெரியுமா? தெரியாதா?
2) இந்த மசோதா தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்திற்கு எதிரானது என்பது உண்மையா? இல்லையா?
3) இந்த மசோதாவில் மூன்று ஆண்டுகளுக்கு தான் கிலோ 3 ரூபாய் விலையில் அரிசி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது உண்மையா? இல்லையா?
4) இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழகத்திற்கு வழங்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்பட்டால், 5,000 கோடி ரூபாய் செலவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்த 3,000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் செலவு ஏற்படுமா? இல்லையா?
5)இந்தச் சட்டம் தமிழக மக்களுக்கு எதிரானதா? இல்லையா?
6)இந்த மசோதாவிற்கான திருத்தங்களை தி.மு.க. நாடாளுமன்றத்தில் அளிக்குமா? அளிக்காதா?
7) தமிழகத்திற்கு எதிராக உள்ள இதே வடிவில் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றால், தி.மு.க. அதற்கு எதிராக வாக்களிக்குமா?
நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு மேற்காணும் வினாக்களுக்கு கருணாநிதி பதில் அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.