For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய வீரர்கள்தான் தாக்குதலுக்குத் தூண்டி விட்டனராம்.. சொல்கிறது டான்

Google Oneindia Tamil News

சியால்கோட்: இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினர்தான், பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தத் தூண்டி விட்டதாக பாகிஸ்தானின் டான் பத்திரிக்கை ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

இன்று காலை பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்தான் காரணம் என்று டான் பத்திரிக்கை கூறுகிறது. சியால்கோட் பிரிவில், பாகிஸ்தான் ரேஞ்சர்ப் பிரிவின் செக்போஸ்ட் மீது எல்லைப் பாதுகாப்பு்ப படையினர் தாக்குதல் நடத்தியதாகவும், அதைத் தொடர்ந்தே பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் டான் கூறுகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் பாகிஸ்தான் படையினர் இந்திய வீரர்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தி 5 பேரைக் கொன்ற பின்னர் 3வது முறையாக பாகிஸ்தான் படையினர் நம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் இந்த தாக்குதலுக்கு இந்தியர்கள்தான் காரணம் என்று டான் கூறுகிறது.

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்தான் முதலில் தாக்கியதாகவும், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படைப் பிரிவினர் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளதாகவும் டான் செய்தி தெரிவிக்கிறது.

English summary
India's Border Security Forces (BSF) personnel started unprovoked firing on a Pakistani Rangers' (PR) checkpost in the Sialkot sector on Sunday, a report in leading Pakistani daily Dawn said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X