For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஏஎஸ் ஆக விரும்புவோருக்கான ஆர்வமூட்டும் நிகழ்ச்சி... அழகப்பா பல்கலை.யில்

Google Oneindia Tamil News

காரைக்குடி: காரைக்குடி தமிழ் மரபு அறக்கட்டளையின் 12ம் ஆண்டு நிறைவு தொடர்பாக, நாளை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், ஐ.ஏ.எஸ் துறையில் மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையிலான ஒரு நிகழ்ச்சி ஒன்றினை நிகழ்த்த உள்ளார்கள்.

தமிழ்மரபு அறக்கட்டளையின் சுந்தரராஜன்(இன்னம்பூரான்) சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.

நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதில் காரைக்குடி வட்டாரத்து பிளஸ்டூ மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் இந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து தலைமை உரை ஆற்ற உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து சுந்தரராஜனின் சொற்பொழிவு நடைபெறும்.

தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் ஏற்பாடு செய்து வரும் மாணவர்களுக்குக் கல்வியிலும் நற்சிந்தனையிலும் ஈடுபாடு ஊட்டும் நிகழ்ச்சிகளின் வரிசையில் இந்த நிகழ்வும் இடம் பெறுகின்றது.

இத்தகவலை, தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனரும், துணைத் தலைவருமான சுபாஷிணி ட்ரெம்மல் தெரிவித்துள்ளார்.

English summary
A special lecture has been arranged for IAS aspirants at Azhagappa university, Karaikudi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X