போலீஸ் பக்ருதீன் மதுரையில் பதுங்கல்: சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் சோதனை
Subscribe to Oneindia Tamil

திருமங்கலம் அருகே பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி சென்ற வழியில், ஆலம்பட்டி பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு மற்றும் பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்டவற்றில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த வழக்குகளில், மதுரையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், மேலப்பாளையம் பன்னா இஸ்மாயில் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை புதூர் பகுதியில், போலீஸ் பக்ருதீன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனைக்குப் பிறகு, புதூர் பகுதியைச் சேர்ந்த அமானுல்லா என்ற அப்துல்லாவை அழைத்துச் சென்று சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications