முல்லைப் பெரியாறு அணை வழக்கு விசாரணை இன்று முடிவடையும்: தலைமை நீதிபதி சதாசிவம்
Subscribe to Oneindia Tamil

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாற்றுமுறை சமரச தீர்வு மையக் கூட்டத்தை நேற்று திறந்து வைத்துப் பேசிய தலைமை நீதிபதி சதாசிவம், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் அடக்குமுறை தொடர்பான வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும். 5 முதல் 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விரைந்து முடிக்க வேண்டும். பல நேரங்களில் ஒரு சில வழக்குகளை விசாரிப்பதில் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை புதன்கிழமை முடிவடைய உள்ளது.
தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications