சிவகாசி: பட்டாசு ஆலை வெடிவிபத்து 5 பேர் காயம்... போலீசார் வழக்குப் பதிவு
சிவகாசி: சிவகாசி அருகே திங்கள்கிழமை காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்
சிவகாசி அருகே முதலிப்பட்டியில் தேசிங்குராஜன் என்பவருக்கு பட்டாசு ஆலை உள்ளது. அந்த பட்டாசு ஆலையில் இன்று பட்டாசுகளை தயாரித்து பேக்கிங் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர்.
பட்டாசுகளை பேக்கிங் செய்யும்போது, ஒன்றோடு ஒன்று உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த திரிசங்கு (38), முருகேஸ்வரி, தமிழ்செல்வி, அழகுமணி, வீரம்மாள் ஆகிய 5 பெண்களுக்கு உடலில் தீக்காயம் ஏற்பட்டது.
காயமடைந்த 5 பெண்களும் உடனடியாக சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலிப்பட்டி ஓம் சக்தி பட்டாசு ஆலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட பயங்கர வெடிவிபத்தில் 38 பேர் உடல் கருகி பலியாகினர், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு எம்.துரைசாமிபுரம் பட்டாசு ஆலையில் நேற்று நடந்த விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.