தூத்துக்குடி போலீசாரை அலறவைத்த இலங்கை போன்! 32 தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல்!!
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. தாம் இலங்கையில் இருந்து பேசுவதாக, ஈழத் தமிழில் பேசிய அந்த நபர், தமிழகத்துக்குள் மொத்தம் 32 தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கின்றனர் என்று எச்சரித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அந்த தொலைபேசி இலங்கையில் எங்கிருந்து பேசப்பட்டது என்பது தொடர்பாக கண்டறியுமாறு அந்நாட்டு போலீசாரிடம் கேட்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2 முறை மத்திய உளவுத் துறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் இருந்து அனாமதேய தொலைபேசி அழைப்பு மூலமும் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தெரிவிக்கப்பட்ட தகவலால் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications