For Daily Alerts
Just In
தமிழகத்தைத் தாக்க இலங்கையில் 'ஸ்லீப்பர் செல்கள்' பதுங்கியிருப்பது உண்மையே: கியூ பிரிவு போலீசார் உறுத
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் குறித்து தமிழகத்துக்கு தொடர்ந்து மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் வந்த மர்ம தொலைபேசி அழைப்பு 32 தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டதாகவும் கூறியது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து கடலோர பகுதிகளிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இலங்கையில் தமிழகத்தைத் தாக்கக் கூடிய பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களுடன் கூடிய ஸ்லீப்பர் செல்கள் பதுங்கியிருப்பது உண்மைதான் என்று தமிழக கியூ பிரிவு போலீசார் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்களால் உடனே நமக்கு ஆபத்து இல்லை என்றாலும் எதிர்காலத்தில் ஆபத்து இருக்கிறது என்றும் கியூ பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.
Comments
English summary
Tamilnadu Q branch sleuths said that possibility of sleeper cells in Sri Lanka was definitely a threat to security of Tamil Nadu.
Story first published: Monday, August 26, 2013, 9:52 [IST]