கோயில் வாசலில் சாமி சிலை... திருச்செந்தூரில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கோயில் வாசலில் கிடந்த சாமி சிலையால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி குமாரசாமி புரத்தில் ஆனந்த பரமேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் வாசலில் காலை ஓன்றரை அடி உயரத்தில் 2 கிலோ எடை கொண்ட செம்பிலான நடராஜர் சிலை கிடந்தது.
அந்த வழியாக சென்ற தலையாரி ராமஜெயம் இதைப் பார்த்து விஓஏ பாலசுப்பிரமணியத்துக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அந்த சிலை திருச்செந்தூர் போலீஸ் வசம் ஓப்படைக்கப்பட்டது.
சிலை எந்த கோவிலில் இருந்தாவது திருடப்பட்டதா, அதை வீசி சென்றது யார், என்பது குறித்து இன்ஸ்பெக்டர் பத்மநாபன், எஸ்ஐ பேச்சி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் முன்பு சாமி சிலை கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications