For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பராமரிப்பு: நாளை முதல் வைகை, பல்லவன், சோழன் எழும்பூருக்கு லேட்டாக வரும்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Chennai bound southern trains to come late
சென்னை: ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் 8 ஆம் தேதி வரை, பல்லவன், வைகை, சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை எழும்பூருக்கு தாமதமாக வந்து சேரும்.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

‘‘செங்கல்பட்டு, திண்டிவனம் இடையே பராமரிப்பு பணிகாரணமாக, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 2.40 மணிக்கு வந்து சேரும் மதுரை, சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12636) மதுராந்தகம் ரயில் நிலையத்தில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டு, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 4.40 மணிக்கு வந்தடையும்.

சென்னை எழும்பூர், மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (வ.எண்.12635) எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் 50 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, விழுப்புரம் ரெயில் நிலையத்தை தாமதமாக வந்தடையும். மாலை 5.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

திருச்சி, சென்னை எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் (வ.எண்.16854) மதுராந்தகம் ரயில் நிலையத்தில் 1 மணி நேரம் நின்று, எழும்பூருக்கு மாலை 6.50 மணிக்கு வந்தடையும்.

அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும், சென்னை எழும்பூர், காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (வ.எண்.12605) 90 நிமிடங்கள் கால தாமதமாக புறப்பட்டு செல்லும். சென்னை கடற்கரை, மேல்மருவத்தூர் மின்சார ரயில் இரு மார்க்கத்திலும் (வ.எண்.66045/63044) செங்கல்பட்டுக்கும மேல்மருவத்தூருக்கும் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், மேல்மருவத்தூர் விழுப்புரம் பயணிகள ரயில் (வ.எண்.66045/66046) இரு மார்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது'' எனக் கூறப்பட்டுள்ளது.

English summary
Chennai bound southern trains will arrive late due to some rapair works near Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X