சென்னையில், ராட்சத குடிநீர் குழாய் உடைந்தது: 150 வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதி
சென்னை: சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் ராட்சதக் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக போரூர் அருகே, அய்யப்பந்தாங்கல் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரியில் இருந்து தான் நாள் ஒன்றுக்கு சுமார் 100 கன அடி தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு போரூர் பகுதியில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்துக்கு ராட்சத குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப் பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை அய்யப்பந்தாக்கல் பகுதி குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் நீரால் சூழ்ந்தது. இ.வி.பி நகரை சூழ்ந்த வெள்ள நீர், அங்குள்ள 150க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் திடுக்கிட்ட பொதுமக்கள், வீடுகளை விட்டு பாதுகாப்பான மேடான இடங்களில் சென்று நின்று கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போரூர், செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள வால்வுகளை அடைத்தனர். இதன் மூலம் ராட்சத குழாய் வழியாக தண்ணீர் வெளியேறுவது தடுத்து நிறுத்தப் பட்டது. அதனைத் தொடர்ந்து, குழாய் உடைப்பை சரிசெய்யும் பணி தொடங்கி நடைபெற்றது.
இதன் விளைவாக கே.கே.நகர் உள்ளிட்ட குடிநீரேற்று நிலையங்களுக்கு தண்ணீர் வரவில்லை. குழாயில் வந்த தண்ணீர் வீணாகி ஐயப்பன்தாங்கல் பகுதியில் குளமாக தேங்கியதால், மின்மோட்டார்கள் மூலம் அஓஅகுதியில் தேங்கிய நீர் வெளியேற்றும் பணி செய்யப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications