விநாயகர் சதுர்த்தி - தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு
சென்னை: விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுவதால் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளுக்குப் பாதுகாப்புக்கு காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனராம். சென்நையில் 1705 இடங்களில் பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் வருகிற 15-ந்தேதியன்று இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதில் முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் பங்கேற்கிறார். மற்ற இந்து அமைப்புகள் சார்பில் 4 நாட்கள் ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.
சென்னையில் பெரிய சிலைகள் நிறுவப்படும் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாளை முதல் அனைத்து விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்படும் வரை சுமார் 1 வார காலத்துக்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்பவர்கள் தங்களுக்குள் ஒரு கமிட்டியை ஏற்படுத்தி போலீசுடன் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறவுறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் விழா கமிட்டியை சேர்ந்த இருவர் சிலை அமைத்துள்ள இடத்தில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எளிதில் தீப்பிடிக்கக் கூடிய ஓலை கொட்டகைகள் போன்றவற்றை அமைக்க கூடாது. விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அனு மிக்கப்பட்ட சாலை வழியாக மட்டுமே சிலைகளை எடுத்து செல்ல வேண்டும். மாட்டு வண்டிகளில் சிலைகளை எடுத்து செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. மத உணர்வுகளை தூண்டும் வகையில் ஒலி பெருக்கி மூலம் பிரசாரங்கள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல தமிழகம் முழுவதிலும் விநாயகர் சிலைபூஜை மற்றும் சிலைக் கரைப்பு பேரணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications