குடும்பக்கட்டுப்பாட்டு சிகிச்சையில் விபரீதம்.. நாகர்கோவில் அருகே இளம் பெண் பலி, உறவினர்கள் போராட்டம்
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கானவிளை பகுதியை சேர்ந்தவர் விஜய். ராணுவ வீரரான அவரின் மனைவி ஆஷா 9 நாட்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆஷாவிற்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பிறகு அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் மயக்க மருந்து கொடுத்ததில் சுய நினைவை இழந்த ஆஷா 3 மூன்று நாட்களாக கோமா நிலையில் இருந்ததாக கூறபடுகிறது. அந்த தருணத்தில் ஆஷாவை பார்க்க கூட உறவினர்களை மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் ஆஷா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதை ஏற்க மறுத்த உறவினர்கள், மருத்துவர்களின் அலட்சிய போக்கும், தவறான சிகிச்சையும் ஆஷா உயிரிழக்க காரணம் என்று குற்றம் சாட்டினர்.
ஆஷாவின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மகள் இறந்த சம்பவத்தை கேட்டு ஆஷாவின் தாய் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்தது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications