பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டியா?.. மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும்.. புள்ளி விவரங்களுடன் ராகுல் அட்டாக்!
பெங்களூர்: கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, வேலை வாய்ப்பு இன்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்து இருப்பது ஏன்? என்றும் பரோட்டாவிற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி ஏன்? என்றும் இதற்கெல்லாம் பிரதமர் மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக கடந்த மாதம் 7-ஆம் தேதி தமிழகத்தில் கன்னியாகுமரியில் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி. இங்கு மக்களை சந்தித்த ராகுல் காந்தி அடுத்ததாக கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டார்.

கர்நாடகாவில் ராகுல் காந்தி
தொடர்ந்து கேரளாவிலும் நடைபயணத்தை முடித்துக்கொண்ட ராகுல் காந்தி தற்போது கர்நாடக மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கர்நாடகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் ராகுல் காந்தியின் கர்நாடக நடைபயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் ராகுல் காந்தி கர்நாடகாவில் நடைபயணத்தை தொடங்கிய நாள் முதல் போஸ்டர் சர்ச்சையில் தொடங்கி பல்வேறு விவகாரத்தில் பாஜக காங்கிரஸ் இடையே வார்த்தை போர் தொடங்கியுள்ளது.

மழை, வெயில் பொருட்படுத்தாமல்
மழை வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ராகுல் காந்தி நடைபயணம் சென்று மக்களை சந்தித்து வருகிறார். இதற்கிடையே ராகுல் காந்தியின் நடைபயணத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருப்பதாகவும், இதனால் இந்த முறை கர்நாடகாவில் காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும் என இப்போது காங்கிரஸ் ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர். பாரத் ஜோடோ யாத்திரைக்கு இடையே கட்சியினருடன் ராகுல் காந்தி உரையாடி வருகிறார். அவ்வப்போது பொதுக்கூட்டங்களில் உரையாற்றி வரும் ராகுல் காந்தியில் மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக சாடி வருகிறார்.

அடுக்கடுக்கான கேள்வி
இந்த நிலையில் 37-வது நாளாக ராகுல் காந்தி இன்று தனது நடைபயணத்தை தொடங்கினார். கர்நாடகாவில் 13-வது நாளாக இன்று ராகுல் காந்தி பாத யாத்திரை இன்று தொடங்கினார். இந்த நிலையில், இன்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பரோட்டாவிற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி ஏன்?
ராகுல் காந்தி தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகமாக இருப்பது ஏன்? வேலை வாய்ப்பு இன்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்து இருப்பது ஏன்? பரோட்டாவிற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி ஏன்? விவசாய தேவைக்கு பயன்படும் டிராக்டர்களுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி ஏன்? இதுபோன்ற கேள்விகளை பாரத் ஜோடோ யாத்திரை தொடர்ந்து எழுப்பும். பிரதமர் மோடி நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications