சென்னையில் இருந்து கர்நாடகா சென்றால் முகாமில் 3 நாட்கள்- வீட்டில் 11 நாட்கள் தனிமை-எடியூரப்பா அதிரடி
பெங்களூரு: கொரோனா அதிகம் பாதித்திருக்கும் சென்னை மற்றும் டெல்லியில் இருந்து கர்நாடகாவுக்கு சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம். இதனையடுத்து தமிழகம், டெல்லியில் கொரோனா உச்சகட்டமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகாவில் கொரோனா பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா அதிகம் பாதித்த சென்னை, டெல்லியில் இருந்து கர்நாடகா வருவோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை, டெல்லியில் இருந்து கர்நாடகா வருவோர் முதல் 3 நாட்கள் அரசின் முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவர்; பின்னர் 11 நாட்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவர் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

7 நாட்கள் தனிமை
அதேநேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு வருவோருக்கு அரசு முகாம்களில் 7 நாட்களும் வீடுகளில் 7 நாட்களும் தனிமைப்படுத்தப்படுவர்.
இது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், பிற மாநிலங்களில் இருந்து கர்நாடகா திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications