கர்ப்பிணினு கூட பாராமல்.. தங்கையை கோடரியால் வெட்டிய இளைஞர்.. காரணம் தான் ஷாக்
பெங்களூர்: கர்நாடகாவில் வேறு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்த ஆத்திரத்தில் சொந்த தங்கை - 4 மாத கர்ப்பிணி என்று கூட பாராமல் உறவினரின் திருமண விழாவில் வைத்து கோடரியால் இளைஞர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தை சேர்ந்தவர் மீனாட்சி. இவரது அண்ணன் பெயர் மஞ்சுநாத் (வயது 35). மீனாட்சிக்கும், உதய் குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்.

இருப்பினும் அவர்களுக்கு இடையேயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் மீனாட்சியின் வீட்டுக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதோடு காதலை கைவிட்டுவிட்டு தாங்கள் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளும்படி மீனாட்சியிடம் வலியுறுத்தினர். ஆனால் மீனாட்சி கேட்கவில்லை. திருமணம் செய்தால் காதல் மஞ்சுநாத் உடன் தான். வேறு யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என்று உறுதியாக இருந்தார் . இருப்பினும் குடும்பத்தினர் அவர்களின் காதலை ஏற்கவில்லை.
இதனால் ஓராண்டுக்கு முன்பு மீனாட்சி வீட்டை விட்டு வெளியேறி மஞ்சுநாத்தை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவர்கள் பெங்களூரில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். மீனாட்சி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதற்கிடையே தான் மீனாட்சியின் உறவினர் வீட்டில் இருந்து அவருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டது. திருமணத்துக்கு கட்டாயம் வரவேண்டும் என்று மீனாட்சியிடம் அவரது உறவினர் கூறினார்.
இதையடுத்து மீனாட்சி தனது கணவர் உதய் குமாருடன் உறவினர் வீட்டுக்கு திருமணத்துக்கு சென்றார். அப்போது அங்கு மீனாட்சியின் அண்ணன் மஞ்சுநாத்தும் வந்திருந்தார். வேற்று மதத்தை சேர்ந்தவரை கரம்பிடித்த ஆத்திரம் அடங்காத அவர் கோடரியை எடுத்து அனைவரின் கண்முன்பும் மீனாட்சியை வெட்டினார்.
இதை திருமண விழாவிற்கு வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் மஞ்சுநாத்தை தடுத்து அவரது கையில் இருந்த கோடரியை பிடுங்கினர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மீனாட்சியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றி கொப்பல் மாவட்ட எஸ்பி ராம் அரசித்தி கூறுகையில், ‛‛காயமடைந்த பெண் கொப்பல் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமாக இருக்கிறார். இதுதொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மஞ்சுநாத் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.
வேற்று மதத்தை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்து ஓராண்டுக்கு மேலாகியும் கர்ப்பிணியாக இருந்த சகோதரி மீது ஆத்திரம் அடங்காமல் திருமணவிழாவில் அனைவரின் முன்பும் இளைஞர் கோடரியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications