கோவிலுக்கு சென்று திரும்பும் போது விபத்து.. கர்நாடகாவில் 10 தமிழர்கள் உட்பட 12 பேர் பலி.. கொடூரம்!
கர்நாடக தமிழக தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர்: கர்நாடக தமிழக தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியில் தர்மஸ்தலாவில் நிறைய கோவில்கள் இருக்கிறது. இங்கு வழிபாடு நடத்த தமிழகத்தில் இருந்து பக்தர்கள் பலர் செல்வது வழக்கம். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து 10 பேர் ஒரே காரில் சென்றுள்ளனர் .

இவர்கள் எல்லோரும் கிரிஷ்ணகிரி மாவட்டம் அருகே உள்ள சீக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள். அங்கு கோவிலில் வழிபாடு முடித்துவிட்டு இவர்கள் ஓசூர் நோக்கி காரில் வந்துள்ளனர்.
இந்த நிலையில் தும்கூர் அருகே குனிகல் பகுதியில் இவர்கள் காரில் செல்லும் போது, கார் கட்டுபாட்டை இழந்தது. கார் வேகமாக கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருக்கும் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு சாலைக்கு வெளியே சென்றது.
சாலைக்கு வெளியே இருந்த பெரிய பள்ளத்தில் கார் வேகமாக சென்று மோதியது. இதில் காரில் இருந்த 12 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.10 தமிழர்கள் உட்பட 12 பெறும் பலியானார்கள். இவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவர்கள் இருவரும் பெங்களூரை சேர்ந்தவர்கள். 10 தமிழர்கள் உட்பட 12 பேரும் பலியானார்கள். இவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அணு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications