Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 தோழிகளை ஒரே மேடையில் திருமணம் செய்த கர்நாடகா இளைஞர்.. காரணத்தை கேட்டால் அசந்துபோவீங்க!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் ஒரே மேடையில் தனது நீண்ட கால தோழிகள் 2 பேரை ஒரே மேடையில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்திருப்பது பேசும் பொருளாகி உள்ளது. இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் இணையதளங்களளில் வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தான் அவர்கள் யார்? இரு தோழிகளையும் அந்த வாலிபர் திருமணம் செய்து கொண்டதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

‛‛ஒரு மனைவி தன் கணவனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டு கொடுப்பார். ஆனால் எந்த காரணம் கொண்டும் தனது கணவனை இன்னொருவருக்கு விட்டு கொடுக்க மாட்டார்'' என்பது நம் நாட்டு பெண்களின் எண்ணமாக உள்ளது. இதனால் தான் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படும்போது மனைவி அதை சகித்து கொள்ள மாட்டார்.

a-man-married-two-women-on-the-same-stage-in-chitradurga-and-all-three-were-childhood-friends

அதுவரை தென்றலாக இருக்கும் மனைவி புயலாக மாறி தனது கணவனை அபகரிக்கும் பெண்ணை பந்தாடிய சம்பவங்கள் பல உண்டு. அதேபோல் நம் நாட்டில் மனைவி, கணவன் உயிரோடு இருக்கும்போது இன்னொரு ஆண், பெண்ணை திருமணம் செய்வது சட்டத்துக்கு புறம்பானது. ஆனால் கர்நாடகாவில் ஒருவர் தனது 2 தோழிகளை ஒரே மேடையில் திருமணம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அவரது பெயர் வாசீம் செய்க். வயது 25. இவருக்கு 2 நெருங்கிய தோழிகள் இருந்தனர். அவர்களின் பெயர் ஷிபா செய்க் மற்றும் ஜனத் மகாந்தர். இவர்கள் 3 பேரும் நீண்டகாலமாக நண்பர்களாக உள்ளனர். எங்கு சென்றாலும் 3 பேரும் சேர்ந்தே சென்று வந்தனர். 3 பேர் இடையே நல்ல புரிதல் இருந்தது. இதற்கிடையே தான் அவர்களுக்கு ஒரு எண்ணம் வந்துள்ளது.

இப்போது 3 பேரும் நண்பர்களாக மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் வரும்காலத்தில் திருமணம் நடந்துவிட்டதால் நட்பை தொடர முடியாது என்று அவர்கள் நினைத்து வருத்தப்பட்டுள்ளனர். திருமண வாழ்க்கை தங்களை பிரித்து விடும் என்று அஞ்சினர். இதனால் அவர்கள் மாற்று முடிவை எடுத்தனர். அதாவது அவர்கள் 3 பேருமே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

வாசிம் செய்க் தனது தோழிகளான ஷிபா செய்க் - ஜனத் மகாந்தர் ஆகியோரை திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதுபற்றி 3 பேரும் தங்களின் குடும்பத்தினரிடம் பேசியுள்ளனர். முதலில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு 3 பேருக்கும் இடையே உள்ள நட்பு மற்றும் புரிதலை தொடர்ந்து அவர்கள் திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டினர்.

இதையடுத்து வாசிம் செய்க் தோழிகளான ஷிபா செய்க் - ஜனத் மகாந்தர் ஆகியோரை ஒரே மேடையில் திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் சித்ரதுர்கா மாவட்டம் ஹோரபேட்டையில் உள்ள எம்கே பேலஸில் வெகுவிமரிசையாக நடந்தது. மணமகன், மணமகள்களின் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் வாழ்த்த அவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

அதனை பார்க்கும் ஒரு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திருமணம் சட்டவிரோதமானது. மனைவிகளாக மாறி இருக்கும் 2 தோழிகளுக்கும் இடையே பிரச்சனை வரலாம். இது 3 பேரின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கலாம் என்று கூறி வருகினறனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+