கொரோனாவிலிருந்து மீண்டவர்களை பாதிக்கும் புதிய வைரஸ் தொற்று.. காரணம் ஸ்டீராய்டு
பெங்களூர்: கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளுக்கு சைட்டோமெகாலோவைரஸ் எனும் புதிய வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது.
கொரோனா பாதிப்பின் போது யாருக்கெல்லாம் நோய் எதிர்ப்ப சக்தியை அதிகரிக்க மாத்திரைகள் அல்லது ஸ்டீராய்டுகள் வழங்கப்பட்டதோ அவர்களுக்கெல்லாம் இந்த நோய் பாதிப்பு ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.

கொரோனாவால் பாதித்து குணமடைந்தாலும் அவர்களுக்கு புதிய புதிய நோய்கள் வந்த வண்ணம் உள்ளன. பெங்களூரில் ஜெயாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 63 வயது நோயாளி கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் இந்த புதிய வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அது போல் மணிப்பால் மருத்துவமனையிலும் இதே வைரஸால் மற்றொரு நோயாளி பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு சரியாக 4 வாரங்கள் கழித்து இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
Recommended Video
இதை கண்டறிய நுரையீரல் பாதையின் கீழ் உள்ள இடத்தில் இருந்து சளி சாம்பிலை எடுத்து அதன் மூலம் கண்டறியலாம். இந்த சைட்டோமெகாலோ வைரஸ் (CMV)ஒரு பூஞ்சையை போன்றதுதான்.












Click it and Unblock the Notifications