புதுஜோடி.. ‛செல்பி'னு எடுக்க கணவரை ஆற்றுக்கு கூட்டிச்சென்று மனைவி செய்த செயல்.. இனி மறக்க மாட்டார்
பெங்களூர்: கர்நாடகாவில் திருமணமான 3 மாதத்தில் ‛செல்பி' எடுக்கலாம் என்று ஆற்றுக்கு அழைத்து சென்ற மனைவி, தனது கணவரை ஆற்றுக்குள் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கும், இளம்பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருமணமான சில வாரங்கள் அவர்கள் இருவருக்கும் நன்றாக இருந்தனர். அதன்பிறகு கடந்த சில வாரங்களாக அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இந்நிலையில் தான் இன்று தனது கணவரை அந்த பெண் கட்லூர் கிராமத்தில் ஓடும் கிருஷ்ணா ஆற்றுக்கு அழைத்து சென்றார். ஆற்றின் மேல்புறம் செல்லும் மேம்பாலத்தில் அவர்கள் 2 பேரும் நின்று கொண்டிருந்தனர்.
இந்த பாலம் தான் கர்நாடகா மற்றும் தெலுங்கானாவை இணைக்கிறது. இந்த பாலத்தின் ஒருபுறம் கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டம் உள்ளது. மறுபுறம் தெலுங்கானாவின் நாராயன்பேட்டை மாவட்டம் உள்ளது. இந்த சமயத்தில் ‛செல்பி' எடுப்போமா? என்று மனைவி கேட்டுள்ளார்.
இதை நம்பிய அந்த இளைஞர் ஓகே சொன்னார். இதையடுத்து இருவரும் போட்டோ எடுத்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று அந்த இளைஞர் பாலத்தில் இருந்து கிருஷ்ணா ஆற்றுக்குள் விழுந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வாகனத்தை நிறுத்தி வந்து பார்த்தனர். அப்போது அந்த இளைஞர் நீச்சலடித்து ஆற்றுக்கு நடுவே இருந்த பாறையை பிடித்து ஏறி அதன் மீது நின்றார்.
அதன்பிறகு மற்றவர்கள் கயிற்றை பயன்படுத்தி கிருஷ்ணா ஆற்றில் விழுந்த இளைஞரை மீட்டனர். அவரிடம் ‛‛ஆற்றுக்குள் ஏன் குதித்தீர்கள்'' என்று கேட்டனர். அதற்கு அந்த இளைஞர், ‛‛ஆற்றுக்குள் நான் குதிக்கவில்லை. என் மனைவி தான் தள்ளிவிட்டார்'' என்று கூறினார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications